0

மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பழத்தை தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க  வைக்கவேண்டும்.  தொடர்ந்து 12நாட்கள் பழச்சாற்றில் ஊறவைத்த சீரக சூரணத்தை கொடுத்து வரவேண்டும். பின்பு மீண்டும்  12நாட்கள் குளிக்க வைத்து சூரணம்  தரவேண்டும். இதுபோல் 4முறை (48) நாட்கள் கொடுத்து வந்தால் பைத்தியம் முழுவதும்  குணமடையும். எலுமிச்சை சாறு, கரிசலாங்கண்ணிச்  சாறு பால் வகைக்கு அரைலிட்டர் எடுத்து காய்ச்சி வடித்து தலைமுடிக்கு  ஆறு மாதம் தொடர்ந்து தடவி வர முடி நரைக்காமல் நீண்டு வளரும்.



நகச்சுற்று என்ற நோய் ஏற்பட்டால் தாங்க முடியாத குத்தல் வலி உண்டாகும். எத்தகைய மருத்துவம் செய்தாலும் வலியும்  வேதனையும் நீங்காது. இவர்கள் நகச்சுற்று ஏற்பட்ட விரலில் எலுமிச்சை சொருகி வைத்தால் வேதனை குறையும். மேலும்  நகச்சுற்றும் பழுத்து உடையும். கபநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் இருமல் ஏற்படும் இவர்கள் எலுமிச்சை சாற்றை  30மிலி இந்துப்பு 15 கிராம், சீரகம் 5 கிராம்  சேர்த்து தண்ணீரில் கலந்து 18 நாட்கள் குடித்து வந்தால் கபநோயின் தீவிரம்  குறைந்து குணம் ஏற்பட தொடங்கும். பித்தத்தால்  வாய்பிதற்றல் ஏ்பட்டவர்களுக்கும் பக்கசூலை வாதம் ஏற்பட்டவர்களுக்கும்  இதை கொடுத்தால் குணமடையும். கைகால்களில்  கருமையான படை படர்ந்துள்ளவர்கள் இதை செய்தாலும் குணமடையும்.

கைகால்களில் கருமையான படை படர்ந்துள்ளவர்கள்  எதை செய்தாலும் அது நீங்காது. இவர்கள் எலுமிச்சை சாற்றில் நிலாவரை  வேரை தொடர்ந்து ஒரு வாரம் இழைத்து பூசிவர  உடனடியாக அந்த கருமை நீங்கி தோல் பழைய நிலைக்கு வரும் எலுமிச்சை  சாற்றுடன் தேன் கலந்து  காலை வேளையில்  மட்டும் 120 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ஆயுள் பெருகும். பேதி மருந்து  சாப்பிட்டு அதுவே அளவுக்கு  அதிகமாக  பேதியானால் அவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை 100மிலி அளவில் எடுத்து 100மிலி  தண்ணீர் கலந்து குடித்தால் கழிச்சல்  நின்றுவிடும். உடல்சூடு அதிகம் ஏற்பட்டால் புளித்தமோரில் இதன் இலையை ஊறவைத்து  அதை பழைய சோற்றில் ஊற்றி  கல்உப்புபோட்டு சாப்பிட உடலில் ஏற்படும் அதிக அளவு வெப்பம் உடனடியாக குறைந்துவிடும்.

Post a Comment

 
Top