0

புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது.. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு  அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் தாயகமாக பிரிட்டிஸ், கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த  அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிக்கு பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு  ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.. நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி  பழம் நீலநிறமாவதற்கு தேவையான ஆண்டியாக்ஸிடன்ட்களை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள்  நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாககூடிய நோய்களை தடுக்கிறது.

வயிற்று கொழுப்பை குறைக்க

நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள்  புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம். இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை  குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம். ஏனெனில்  இப்பழத்தில்  உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.

உயர் இரத்த அழுத்தம் தடுக்க

நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள்  போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள்  சோதனைக்கு உட்படுத்தபட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு  இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

மூளை பராமரிப்பு

புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை  கொண்டுள்ளது. புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று சின்சின்னாட்டி  அகாடமிக் ஹெல்த் சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்  திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.

நன்றி
தினகரன்

Post a Comment

 
Top