மறதியை போக்கக் கூடிய நீர் பிரம்மி என்ற மூலிகையின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம்.பிரம்மனின் மறுபாதி என்று ஐதீகமாக நம்பப்படும் இந்த மூலிகையானது எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் மூளைக்கு பலத்தை கொடுத்து, மறதியை போக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கக் கூடியதாக உள்ளது.
புற்று நோய்கள் உண்டாவதற்கான உடலில் உள்ள கிருமிகள் தோன்றாத வண்ணம் தடுப்பதால், இது புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உடையதாக விளங்குகிறது. வேபாபா முன்னேரி என்று இதன் தாவர பெயரை குறிப்பிடுகின்றனர்.நீர் பிரம்மி செடி என்பது நீர் நிலைகளின் கரையோரங்களில் வளரக் கூடிய சிறிய செடியாகும். பார்ப்பதற்கு பருப்பு கீரை என்று சொல்லக் கூடிய கீரையைப் போன்று தோன்ற கூடிய, ஆனால் அதை விட சற்று சிறியதான தோற்றத்தில் காண கிடைக்கிறது.
இதன் இலைகள் நிறைய நீர் சத்து நிரம்பி காணப்படும்.நீர் பிரம்மி இலைகளை நரம்புகளை பலப்படுத்தும் ஒரு டானிக் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நீர் பிரம்மி இலைகளை பயன்படுத்தி மருந்து ஒன்றை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் நீர் பிரம்மி இலைகள், நெய், சிற்றரத்தை பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் அரைஸ்பூன் அளவு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் நன்றாக கழுவிய ஒரு பிடி அளவு நீர் பிரம்மி இலைகளை அதனுடன் சேர்க்க வேண்டும்.
இலைகள் நெய்யில் நன்றாக பொரிந்து வரும் வரையில் வதக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை அளவு சிற்றரத்தை பொடி சேர்க்க வேண்டும். சிற்றரத்தை பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் பரவலாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். இலைகள் நெய்யில் பொரிந்தவுடன் சிறிதளவு நீர் விட்டு அதை கொதிக்க விட வேண்டும். பின்னர் நன்றாக கொதித்த பின் இதை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை வடி கட்ட வேண்டும்.
இதோடு தேன் சேர்த்து ஒரு தேநீரைப் போல பருகுவதன் மூலம், மூளைக்கு பலம் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் சளித் தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நிவாரணத்தை தரக் கூடியதாக உள்ளது. மேலும் அஜீரணத்தால் ஏற்படக் கூடிய புளித்த ஏப்பத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.இதை பருகுவதன் மூலம் நுரையீரல் கோளாறுகளுக்கும் அற்புதமான மருந்தாகவும் இந்த கஷாயம் விளங்குகிறது. சிற்றரத்தையுடன் சேர்த்து தயார் செய்யப்பட்ட இதை பருகுவதால் சளி, இருமலை போக்குகிறது.
சிற்றரத்தையும், நீர் பிரம்மியும் ஆஸ்துமா, மூச்சு திணறல், சளித் தொல்லை போன்றவற்றை கட்டுப்படுத்தும் நிவாரணிகளாக நன்றாக செயல்படக் கூடியவையாகும்.நீர் பிரம்மியின் இலைகளை காய வைத்து எடுத்து பொடி செய்த மருந்தை ஒரு நாளைக்கு ஒரு டோஸ் என்ற முறையில் 750 மிலி கிராம் முதல் 1500 மிலி கிராம் வரை கூட தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நரம்புகள் பலம் பெறுகின்றன. மூளைக்கு இதம் கிடைக்கிறது.

Post a Comment