எந்த பாம்பு கடித்தது என்று தெரியாமல் பாம்பு கடி ஏற்பட்டால் இதன் வேரை அரைத்து காலை வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எல்லாவிதமான பாம்பு கடிகளும் நீங்கும். மருந்து சாப்பிடும் காலத்தில் 24மணிநேரம் தூங்காமல் இருந்து புதுப்பாளையில் உப்பில்லாத பச்சரிசியை பொங்கி சாப்பிட வேண்டும். பெண்கள் வயிற்றில் உள்ள கருப்பை கோளாறு காரணமாக குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படும்.
பெண்கள் ஆடுதீண்டாப்பாளையின் விதைகளை சூரணம் செய்து ஐந்து கிராம் எடுத்து கையளவு சிற்றாமணக்கெண்ணெயில் கொடுக்க பேதியாகும். மாதம் ஒரு முறை என மூன்று மாதம் கொடுக்க அதன் பிறகு கரு ஏற்படும். பெண்களின் வயது உடல் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனை முறையற்ற மாதவிடாய். இதனால் மனஉளைச்சலும் சில பெண்களுக்கு ஏற்படும்.
இவர்கள் ஆடுதீண்டாப்பாளையின் இலைச்சாற்றை காலை மாலை பத்து மிலி அளவில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாளடைவில் மாதவிடாய் ஒழுங்காகும். விதைச்சூரணம் ஐந்து கிராம் விளக்கெண்ணெயில் சாப்பிட மலத்தில் கலந்துள்ள கிருமிகள் பேதியாகி நீங்கும். முறைக்காய்ச்சல் தணியும். ஆடுதீண்டாப்பாளையின் முழுச்செடியின் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து பக்குவமாய் காய்ச்சி எடுத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
அதை உடலில் ஏற்படும் கரும்படையில் பூச அவை நீங்கி குணம் ஏற்படும். பாம்பு கடித்து விட்டால் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் கொடுக்க விஷம் நீங்கும். இந்த சூரணத்தை கொடுத்து வந்தால் யானை தோல் சொறி என்ற தோல் நோய் நீங்கும். சிலருக்கு முகம் கை கால்களில் கருமை படர்ந்து இருக்கும். இதை கருங்குட்டம் என்பார்கள் இவர்கள் காலை வேளையில் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் வெந்நீரில் கலந்து குடிக்க கருங்குட்டம் குணமாகும்.

Post a Comment