0

தமிழகமெங்கும் கறிக்காகப் பயிரிடப்பெறும் ஒரு கீரை வகை. அரைக்கீரை என்ற பெயரில் தெருக்களில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை.

காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது.

கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம் (டைபாய்டு) ஆகியவை தீரும். எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலுவும் வனப்பும் உண்டாகும். பிடரி வலி, சூதகச் சன்னி ஆகியவை தீரும்.

நன்றி

தினகரன்

Post a Comment

 
Top