கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம் மற்றும் கண்களை பாதுகாக்கின்றன. கேன்சர் அபாயத்தை குறைக்கின்றன.
இவற்றில் உள்ள பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. ஆரஞ்சு வண்ண பழங்களில் ஆல்பா கரோட்டின் அதிகம் உள்ளது. இதுவும் மற்றொரு வகையான வைட்டமின் ஏ ஆகும். இவை கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றன. கரோட்டினாய்டு இதய நோய்களை தடுக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் ஆரஞ்சு வண்ண காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது.
இவை கண்களையும் பாதுகாக்கின்றன. கண் நோய்கள், பார்வை குறைபாடுகளை நீக்கும் வலிமை இந்த பழங்களுக்கு உண்டு. பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 4 முதல் 6 கப் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் 3 கப் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி
தினகரன்

Post a Comment