நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந்திருக்கிறது.
நமது உணவுகளில் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ்வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன.
ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத்தன்மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால்தான் நிறைந்த சக்தியும், நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
யோகிகள் உண்ணும் உணவை மூன்று வகையாகப் பிரித்தனர்.
சாத்வீக உணவு, ரஜோ உணவு, தாமச உணவு என்பவையே அவை மூன்றும்.
சாத்வீக உணவு தூய்மையான உணவு. ரஜோ உணவு உயர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. தாமச உணவு என்பது சுத்தமற்ற, ஆரோக்கியமற்ற கெட்டுப்போன உணவு. யோகியர் சாத்வீக உணவையே தேர்வு செய்கின்றனர்.
பால், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், தேன் ஆகியவை முதல் வகையான சாத்வீக உணவில் அடங்குகிறது.
மாமிசம், மீன், பருப்பு வகைகள், சூடான பொருட்கள், உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ரஜோ உணவாகும். புளித்த கெட்டுப்போன கருவாடு மாமிசம், மது, லாகிரி வஸ்துகள் தாமச உணவு வகையாகும்.
மிருகங்களின் மாமிசம், தானியங்கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. பச்சைப் பட்டாணி, வெங்காயம், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மை உள்ளது. அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
குடும்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண வேண்டும். வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது.
இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம் பேணவும் தேவையான சலோரி சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப்பிடுவது அவசியம்.
மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது. இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம்.
நன்றி
தினகரன்

Post a Comment