பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன் நற்குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... பலரும் அதை ஒரு காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதி லிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே!
‘‘டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்’’ எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து.
‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத் தவிர்க்கலாம்.
இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...’’ என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத் தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார்.
சமைப்பது
பூசணி பத்தையை நறுக்கிய பிறகு கழுவாமல், முழு பத்தையையும் கழுவி விட்டு, பிறகு சின்ன துண்டுகளாக நறுக்கி சமைக்கவும். பூசணிக்காய் சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் மற்ற காய்கறிகளைப் போல நீண்ட நேரம் சமைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் வெந்துவிட்டால், அது கரைந்து, கூழாகி விடும். பூசணிக்காய்க்கென தனி ருசி கிடையாது. அத்துடன் சேர்க்கிற மற்ற பொருட்களின் மணத்தையும் ருசியையும் தானும் கிரகித்து அப்படியே பிரதிபலிக்கக் கூடியது. எனவே, பூசணிக்காயை சூப், கூட்டு, பாயசம், அல்வா, கிரேவி என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். நறுக்கிய பூசணிக்காயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனாலும், அதை அதிக பட்சம் 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவதே நல்லது.
பூசணித் தகவல்கள்
மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி கொண்டதாம் பூசணி. ஆயுர்வேதத்தில் மனநோய்களுக்கான மருந்துத் தயாரிப்பில் பூசணிக்காயின் பங்கு பிரதானமானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. அல்சர் பாதித்தவர்களுக்கு பூசணிக்காய் சாறு கொடுக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு.ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள், ரத்த தொடர்பான நோய்கள், சிறுநீரகப் பாதை தொடர்பான நோய்கள், சிறுநீரகக்கல் போன்றவற்றுக்கும் பூசணிக்காய் பலன் தருகிறது. பூசணிக்காயின் அத்தனை பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அடிபட்ட காயத்தின் மேல் பூசணி இலையைத் தேய்த்தால் சீக்கிரமே ஆறும். பூசணி விதைக்கு, குடல் புழுக்களை அகற்றும் சக்தி உண்டாம்.
வாங்குவது
இப்போதெல்லாம் பூசணி பத்தையாகக் கிடைக்கிறது. அதன் சதைப் பகுதி வெள்ளையாக, மஞ்சள் படராமல், நிறம் மாறாமல் இருக்கவேண்டும். முழு பூசணிக்காயாக வாங்குவதென்றால் கெட்டியாக இருக்க வேண்டும். நல்ல கனமான, அழுத்தமான காய் சிறந்தது.
‘‘டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்’’ எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு.
அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. ‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் . அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடு வதைத் தவிர்க்கலாம்.
இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல... எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சாதத்தையும் பருப்பையும் தவிர, வேறு எந்த உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...’’ என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத் தயாரிக்கக் கூடிய இரண்டு ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார்.
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் அளித்த இரு ஆரோக்கிய ரெசிபிகளையும் பாரம்பரிய ரெசிபியான காசி அல்வாவையும் செய்து காட்டுகிறார் சமையல்கலை நிபுணர் சந்திரலேகா ராமமூர்த்தி.
பூசணிக்காய் கூட்டு
தேவையானவை :
சின்ன துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் - 4 கப், உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - தாளிக்க.
அரைப்பதற்கு..
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், அரிசி - அரை டீஸ்பூன் (எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்) அல்லது காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - சிறிது (மிளகாய் முதல் மிளகு வரை வறுத்து, அத்துடன் பொட்டுக்கடலையை அப்படியே சேர்த்து அரைக்கவும்).
செய்முறை :
பூசணிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் அரைக்கக் கொடுத்துள்ளதில் முதல் வகையையும் தேங்காயைத் தவிர்க்க விரும்புவோர் இரண்டாவது முறையிலும் அரைத்துக் கொள்ளவும். வெந்த காயை அடுப்பில் வைத்து, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும்.
பூசணிக்காய் சூப்
தேவையானவை :
பூசணிக்காய் - 1 பெரிய பத்தை, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, பெரிய வெங்காயம் -1, பயத்தம் பருப்பு (தேவையானால்) - 1 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால் (தேவையானால்) - 1 கரண்டி, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை :
பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி சின்னதாக நறுக்கவும். அவரவர் விருப்பப்படி பயத்தம் பருப்பு சேர்த்தோ, தவிர்த்தோ, பூசணிக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன் அளவாகத் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் 2 விசில் வேக வைக்கவும். அதிலுள்ள தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, வெந்ததை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அரைத்த விழுதுடன், தனியே எடுத்து வைத்துள்ள தண்ணீரைச் சேர்த்து மறுபடி சூடாக்கவும். கெட்டியாக கிரீமி சூப் போல வேண்டுமென்பவர்கள், இந்தக் கட்டத்தில் சூப்பில் 1 கரண்டி பால் சேர்க்கலாம். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
நம் எல்லோருக்கும் 3 வேளை சாப்பாடு அவசியம். அது தவிர ஒவ்வொரு உணவுக்கு இடையிலும் ஏதாவது கொறிக்கிற பழக்கம் இருக்கிறது. அதைத் தவிர்க்க நினைத்தாலும் முடியாத வர்கள் இந்த மாதிரி ஆரோக்கியமான சூப்புக்கு மாறலாம்.
பாரம்பரிய ரெசிபி: காசி அல்வா
தேவையானவை :
வெள்ளை பூசணி (துருவியது ) - 2 கப், சர்க்கரை - 1 1/2 கப் , நெய் - 1 கப், பாதாம் பருப்பு - 5, முந்திரிப் பருப்பு - 10, பால் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி கலர் - 1 சிட்டிகை, ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை :
பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். துருவியதைக் கையால் நன்கு பிழிந்து, அதில் உள்ள நீரை எடுத்து விடவும். கேசரி கலரை சிறிது தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள வெள்ளை பூசணி துருவலைச் சேர்த்து நிறம் மாறி, மிருதுவாகும் வரை வதக்கவும். அடிப் பிடிக்காமல் கவனமாக வதக்க வேண்டும்.
சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கிளறவும். சர்க்கரை கரைந்து கெட்டியாக ஆரம்பிக்கும். நெய் பாத்திரத்தின் ஓரங்களில் வரும்போது கேசரி கலர் சேர்க்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அல்வா பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டு துருவிய பாதாம் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Post a Comment