0
நகரங்களில் வாழ்பவர்களது கூந்தல் பெரும்பாலும் எண்ணெய்த் தன்மை உள்ளதாக இருக்கும் ஆதலால் அடிக்கடி (Mild Shampoo) மைல்ட் ஷம்பூ பாவித்து கூந்தலைக் கழுவுங்கள்.

கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் கூந்தல் பெரும்பாலும் வறட்சியானதாக இருக்கும் அப்படியான கூந்தலை கிழமைக்கு ஒருமுறை கழுவினாலே போதுமானதாகும். இதனாலேயே ஔவையார் “சனிநீராடு” எனச் சொன்னார்.
தலையில் பொடுகு உள்ளவர்கள் (Medicated Shampoo) மெடிகேட்டட் ஷம்பூ பாவியுங்கள். எந்த ஷம்பூ பாவித்தாலும் கூந்தலை நன்றாகக் கழுவுங்கள். கொண்டிசனர் (Conditionar) கூந்தலை அடர்த்தியாகக் காட்டும் என நினைப்பது தவறு. முடிகளுக்கிடையேயுள்ள கவர்ச்சியால் அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து சிக்கு அடைவதை தடுக்கின்றது. நாம் தலை சீவும் பொழுது சிக்கு ஏற்பட்டு முடிஉதிராது இருக்க இது உதவுகின்றது.
கூந்தல் உதிராதிருக்க தலைமுடியை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் சருமத்திற்கு எற்ற சம்பூ பாவியுங்கள். கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகச் சாப்பிடுங்கள். எல்லாவற்றிகும் மேலாக கொதிப்படையாமல் அமைதியாக இருக்கப்பழகிக் கொள்ளுங்கள்.

Post a Comment

 
Top