0
மனநிலை பாதிப்பு உள்ளவர்களை புங்கை மர நிழலில்  இளைப்பாற வையுங்கள். அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழலில் படுத்து தூங்கி பாருங்கள். உங்களுக்கே ஒரு  புத்துணர்ச்சி கிடைக்கும். பொதுவா மனநிலை பாதிச்சவங்கள் திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள்.  அத்திப்பழத்தை சாப்பிட கொடுங்க. பிறகு கசகசாவை பால் விட்டு அரைத்து கற்கண்டு சேர்த்து குடிக்க கொடுங்கள்.



அரைக்கீரையை
அவ்வப்போது சமைச்சி சாப்பிடலாம். அதே போல அகத்திக்கீரை சாப்பிடலாம்.  இதெல்லாம் உங்களுக்கு புதுசா தெரியும். தினசரி காலையிலும், ராத்திரி சாப்பாட்டிலும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக்  கொள்கிறது ரொம்ப நல்லது. இந்த துவையலில் எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது நல்லது.

மற்றபடி பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாவற்றையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும்  சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ராத்திரி தூங்கும்போது தலையணையில் மருதாணிப்பூவை வைத்து கொண்டு  தூங்கவும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அதே போன்று காலில் மருதாணி பூசுங்க. அதுவும் பலன் தரும்.

இது எல்லாவற்றிற்கும் மேல் என்ன காரணத்தால் மனநிலை பாதித்தது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு சரியான வழியை  பாருங்கள். சீக்கிரமாக குணமாயிடுவார்கள். 

Post a Comment

 
Top